காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீ சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீ சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்..

காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை ஆரம்பித்திருந்தனர்.

காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியிளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இப் போராட்டத்தின் போது மாலை நான்கு மணியளவில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஈடுபட்டதுடன் தேங்காயைகளை உடைத்தும் கற்பூர தீச்சட்டிகளும் எடுத்து பிராத்தனையில் ஈடுபட்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு