காலையில் உறக்கத்திலிருந்து எழும்பாதவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலி...

ஆசிரியர் - Editor I
காலையில் உறக்கத்திலிருந்து எழும்பாதவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலி...

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இரவு தூங்கியவர் மறுநாள் காலை 07 மணியாகியும் தூக்கத்தால் எழும்பாததால் , வீட்டார் அவரை தொட்டு எழுப்ப முயன்ற போது , அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். 

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு