குடும்பத்தை பிரிந்துவந்து தனிமையில் வாழ்ந்த இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு! யாழ்.இளவாலையில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
குடும்பத்தை பிரிந்துவந்து தனிமையில் வாழ்ந்த இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு! யாழ்.இளவாலையில் சம்பவம்...

இளவாலை - வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணியில் இருந்து வெள்ளிக்கிழமை (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

இதன்போது புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர், அவரது குடும்பத்தவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை பிரிந்து வந்து 

இளவாலை - வசந்தபுரம் பகுதியில் உள்ள காணியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை (29), அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். 

இவ்வாறு மீட்கப்பட்டவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் அவர்கள் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு