3 சிறார்கள் சடலமாக மீட்பு!! -பிரித்தானியவை நடுங்கவைத்த சம்பவம்-

ஆசிரியர் - Editor II
3 சிறார்கள் சடலமாக மீட்பு!! -பிரித்தானியவை நடுங்கவைத்த சம்பவம்-

பிரித்தானியவின் பிரிஸ்டல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 இளம் சிறார்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி பகல் 12.40 மணியளவில், குறித்த வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பொலிசார் அந்த வீட்டிற்கு சென்ற சில நிமிடங்களிலேயே சிறார்கள் மூவரும் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் இறப்பின் காரணம் தொடர்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த விவகாரத்தில் சூடான் நாட்டவரான 42 வயது பெண் ஒருவர் கைதாகியுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், பொலிஸ் காவலில் உள்ளார்.

மரணமடைந்த சிறார்களில் இருவர் 8 மற்றும் 4 வயதுடையவர்கள் என்றும், இன்னொருவர் 6 மாத குழந்தை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கைதான பெண் பழகுவதற்கு அருமையானவர் என குறிப்பிட்டுள்ள அயலவர்கள், அந்த சம்பவம் தொடர்பில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு