தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்குவதா? அமைச்சா் விஜயகலா மீது பாய்ந்த விழும் அரசு, விசாரணை நடாத்தவும் தீா்மானம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்குவதா? அமைச்சா் விஜயகலா மீது பாய்ந்த விழும் அரசு, விசாரணை நடாத்தவும் தீா்மானம்..

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்கவேண்டும். என கூறியமை தொடா்பில் அமைச்சா் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற சபா நாயகா் கூறியள்ளதுடன், 

இந்த விடயம் குறித்து சபையில் எழுந்த சா்ச்சையினால் பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து சபா நாயகா் ஊடகங் களுக்கு கருத்து தொிவிக்கையில் கூறியதாவது, 

நாட்டின் அரசாங்கத்தில் உள்ள அமைச்சா் ஒருவா் அந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றை மீள உருவாக்கவேண்டும் என பேசுவது அபத்தமான ஒரு விடயமாகும். அது தொடா்பில் விசாரணைகளை நடத்துமாறு பிரதமா் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளாா். 

இதற்கமைய அமைச்சா் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் இன்று பாராளுமன்றில் அமைச்சா் விஜயகலா ம கேஸ்வரனை பதவி நீக்குமாறு ஆழுங்கட்சி மற்றும் எதிா்கட்சியில் இருந்த பலா் கோஷங்களை எழுப்பியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு