விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறன்: அண்ணாமலை!

ஆசிரியர் - Admin
விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறன்: அண்ணாமலை!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயாகாந்தின் உடல்நிலை சீராக இல்லாததால், அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவதிப்பட்டு வருகிறார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயாகாந்தின் உடல்நிலை சீராக இல்லாததால், அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவதிப்பட்டு வருகிறார்.     

இந்நிலையில், இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மியாட் மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில், "விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் , மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு