அரசியல் தலையீடு உள்ளமை உறுதி!! -இலங்கை கிரிக்கெட் சபையை தடை செய்தது ஐ.சி.சி-

ஆசிரியர் - Editor II
அரசியல் தலையீடு உள்ளமை உறுதி!! -இலங்கை கிரிக்கெட் சபையை தடை செய்தது ஐ.சி.சி-

இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐ.சி.சி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக அமுலுக்குவரும்வகையில் இலங்கையின் கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை தனது கடப்பாடுகளை பாரதூரமாக மீறிவிட்டதாக தீர்மானித்துள்ளது.

குறிப்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுப்பது மற்றும் தனது நிர்வாகத்தில்  அரசாங்கத்தின் தலையீடு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இடைநிறுத்தத்திற்கான நிபந்தனைகள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என ஐ.சி.சி மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு