கூகுள் மப் பின்பற்றி சென்று ஆற்றில் கவிழ்ந்த கார்!! -2 மருத்துவர்கள் பலி-

ஆசிரியர் - Editor II
கூகுள் மப் பின்பற்றி சென்று ஆற்றில் கவிழ்ந்த கார்!! -2 மருத்துவர்கள் பலி-

இந்தியாவின் கேரளாவில் பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் அத்வைத் (வயது 29), அஜ்மல் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்வைத் மற்றும் அஜ்மல் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுடன் பயணித்த மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கூகுள் மப்பை பின்பற்றியபடி சாரதி அப்பகுதியை அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், கனமழை காரணமாக சாலை தெரியாததால், கூகுள் மப் காட்டிய வழியையே பின்பற்றினர்.

இருப்பினும், கூகுள் மப் சுட்டிக்காட்டப்பட்டபடி கார் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக தவறுதலாக முன்னோக்கிச் சென்று ஆற்றில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஒரு பெண் உட்பட 3 பயணிகள் மீட்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இறந்த இரு மருத்துவர்களின் உடல்களை மீட்க ஸ்கூபா டைவிங் குழுவை அதிகாரிகள் அனுப்பினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு