கெளதம புத்தர் கூறிய போதனை மூலம் நாட்டை ஐக்கியமாக்க முடியுமாம் வடக்கு ஆளுநர்..

ஆசிரியர் - Editor I
கெளதம புத்தர் கூறிய போதனை மூலம் நாட்டை ஐக்கியமாக்க முடியுமாம் வடக்கு ஆளுநர்..

நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெளத்த துறவிகள் மீண்டும்..மீண் டும் வருவதன் ஊடாக முல்லைத்தீவு மக்களுக்கு பு த்த தருமத்தை கூறி மக்களுக்கு உதவிகளை செய் யவேண்டும் என ஆளுநர் றெஜினோல்ட் கூரே கூ றியுள்ளார்.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் நேற்றதியம் (27) மாலை பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

போதிராஜா பதனமே தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஓமலே சோபிததேரர்  தாய்லாந்து, சிங்கபூர், மலேசிய நாட்டவர்களின் பங்களிப்புடன் 

முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சில்லு வண்டிகள், 1000 மாமரக் கண்டுகள், 100 பசுக் கண்டுகள், பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் என பல உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.  

இந்நிகழ்வில் மேலும் ஆளுநர் உரையாற்றுகையில்,

அதில் கருத்து தெரிவித்த ஆளுநர் நெருப்பாக எரியும் இந்தப் பிரதேசத்திற்கு தங்களின் வருகை ஒரு மழையாகக் கருதுகின்றோம். தங்களை மீண்டும் மீண்டும் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து புத்த தர்மத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி 

இங்கு வசிக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். சட்டங்கள் இன்றி புத்தர் கூறிய போதனை மூலம் நாட்டை ஐக்கியமாக்க முடியும் என்று வடக்கு ஆளுநர் முல்லைத்தீவில் கூறினார். 

தமிழ் மக்களுடன் நான் இங்கே வாழ்ந்து  வருகின்றேன். அவர்களின் கலாச்சாரம் மனித நேயம், மனித தன்மை அவர்களின் துன்பங்கள் அனைத்தினையும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றேன். 

அவர்களுக்கு தேவை கருணை, இரக்கம் பரிவு. இதனை விடுத்து சட்டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. இதனை நாடு பூராகவும் தெளிவுபடுத்த வேண்டும். 

யுத்தம் நடைபெற்றது. இதில் இரு தரப்புக்கள் சண்டை பிடித்தன. யுத்தம் முடிந்தது. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் கையில் இருக்க வேண்டியது துவக்கு அல்ல சமாதான ஒளி விழக்கு அதனை எடுத்துச் செல்ல வேண்டும். 

இப்பகுதியில் கட்டிட ஒப்பந்த காரர்கள் இடைநடுவில் விட்டுச் செல்லும் கட்டிடங்களை உரிய காலப்பகுதியில் இராணுவத்தினர் கட்டி முடிக்கின்றனர். வீதிகளை போடுகின்றனர். 

எதிர்கால இச்சந்ததியினருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை நாட்டி வைத்துள்ளனர். பூரண படுத்தப்படாது காணப்படும் கஸ்டப்பட்ட மக்களின் வீடுகளை இராணுவம்  கட்டி கொடுக்கின்றது. 

இரத்தம் கொடுக்கின்றது. தீவில் வாழுகின்ற மக்களுக்கான கடல்போக்குவரத்துகளை செய்கின்றது. இது போன்ற சேவை இன்னமும் விரிவுபட வேண்டும் என எதிர்பார்கின்றேன். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு