நல்லூர் ஆலய திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகம் செய்தால் தண்டணை!

ஆசிரியர் - Editor I
நல்லூர் ஆலய திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகம் செய்தால் தண்டணை!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண தலைமை அலுவலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு