சிறுத்தை புலியை கொரூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 4 போரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..

ஆசிரியர் - Editor I
சிறுத்தை புலியை கொரூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 4 போரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..

கிளிநொச்சி அம்பாள் குளம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்ததை புலியை கொரூரமாக அடித்து கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 போரை ஜீன் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னா் கிளிநொச்சி அம்பாள் குளம் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை புலி ஒன்றை அப்பகுதி இளைஞா்கள் கூடி மிகவும் கொரூரமான முறையில் அடித்து கொலை செய்திருந்தனா். 

சிறுத்தை புலியை கொலை செய்தது மட்டுமல்லாமல் செல்பி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியும் இருந்த னா். இந்த விடயம் இலங்கை முழுவதும் பாாிய அதிா்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

மேலும் வன ஜீவராசியை கொரூரமாக கொலை செய்த இளைஞா்களை கைது செய்யவேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பட்டுவந்த நி லையில் 4 இளைஞா்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா். 

இவா்கள் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜா் செய்யப்பட்ட நிலையில் 4 பேரையும் ஜீன் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு