யாழ்ப்பாணத்தில் பெண்கள், முதியவர்களிடம் தொலைபேசி திருட்டு! பிரதான சந்தேகநபர் 9 தொலைபேசிகளுடன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பெண்கள், முதியவர்களிடம் தொலைபேசி திருட்டு! பிரதான சந்தேகநபர் 9 தொலைபேசிகளுடன் கைது..

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் முதியவர்களிடம் கைத்தொலைபேசி திருடிவந்த கொள்ளை கும்பலை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து  திருடப்பட்ட9 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலும் திருடிய  தொலைபேசிகளை வாங்கிய நால்வரும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் 

காரைநகர் மானிப்பாய் வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் பயணம் செய்யும் வயது முதிர்ந்தவர்கள் பெண்களின் தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமான முறையில் திருடி வந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் 

இன்று யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் உபபரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும் சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளநிலையில் கைத்தொலைபேசி தொலைத்தவர்கள் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் உரிய முறைப்பாடுகளை காண்பித்து தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு