பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருத்த 3 பிள்ளைகளின் தாய் 6 மாதங்களின் பின் மீட்பு! மீன் வியாபாரி கைது..

ஆசிரியர் - Editor I
பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருத்த 3 பிள்ளைகளின் தாய் 6 மாதங்களின் பின் மீட்பு! மீன் வியாபாரி கைது..

6 மாதங்களுக்கு முன் கடத்திச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாய் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மீன் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்திச் சென்று தடுத்து வைத்தார் எனக் கூறப்படும் மீன் வியாபாரியை  கம்புறுப்பிட்டிய,  பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்ததாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

மீன் வியாபாரியின் அச்சுறுத்தலுக்குள்ளாகி சுமார் 6 மாதங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த மூன்று பிள்ளைகளின் தாயாரையும் பொலிஸார் மீட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்து வைத்திய பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், தான் குறித்த இடத்திலிருந்து தப்பிச் சென்றால் தனது கணவன் மற்றும் குழந்தைகளைக் கொன்று விடுவதாகவும்  நிர்வாண வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும்  மீன் வியாபாரி தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.   

தலைமுடியை வெட்டி கத்தியைக் காட்டி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு தான் ஆளானதாகவும்  அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு