யாழ்.நீர்வேலி ப.நோ.கூ சங்கத்தில் அதிக விலைக்கு விற்க்கப்படும் மண்ணெண்ணை! பதுக்கல் பெருச்சாலிகளின் திருவிளையாடலா?

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலி ப.நோ.கூ சங்கத்தில் அதிக விலைக்கு விற்க்கப்படும் மண்ணெண்ணை! பதுக்கல் பெருச்சாலிகளின் திருவிளையாடலா?

யாழ்.வலி,கிழக்கு நீர்வேலி பலநோக்கு கூட்டுறவு சங்க கிளைகளில்  கட்டுப்பாட்டு விலைகளை மீறி அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசாங்கத்தினால் மண்ணெண்ணெய் விலை குறைப்பு செய்யப்பட்டு 245 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

எனினும் நீர்வேலி பலநோக்கு  நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள கிளைகளில் 1லீற்ரர் மண்ணெண்ணெய் 255 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மண்ணெண்ணெய் விலை குறைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் பதுக்கிய மண்ணெண்ணெணை திடீரென கூட்டுறவு சங்கங்களின் கிளைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டது.

குறித்த விடையம் தொடர்பில் யாழ்.மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு