தமிழ்தேசிய கூட்டமைப்பில் கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்தை இணைத்தால் மாற்று கட்சிக்கு அவசியமில்லை..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பில் கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்தை இணைத்தால் மாற்று கட்சிக்கு அவசியமில்லை..

கஜேந்திரகுமாரை  மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டு செயல்பட்டாள் தனிக் கட்சி அமைத்துச் செயல்படும் தேவை இருக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த வாரம் அவசரமாக முதலமைச்சரை சந்தித்திருந்தார். இச் சந்திப்பின்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் மாகாண சபைத் தேர்தலில் முதல்வரின் நிலைப்பாடு தொடர்பில் கலந்துரைடாடும் நோக்கில் இடம்பெற்ற சந்திப்பின்போது தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றோ 

அல்லது கூட்டமைப்பினை சிதைக்க வேண்டும் என்றோ நான் எண்ணவில்லை. இருப்பினும் அனைத்தும் மக்களின் விருப்பமே. அதேநேரம் கூட்டமைப்பு ஆரம்பிக்கும்போது அதனுள் இருந்த அனைவரும் கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும். 

இந்த வகையில் கஜேந்திரகுமார்  போன்றோர் மீண்டும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்  ஏனையவை கட்சிக்குள் பேசித் தீர்க்ககூடியவைகள். 

அதேநேரம் கூட்டமைப்பிலும் மாவை. சேனாதிராயா , சாம் போன்றவர்களுடனுன் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. இருப்பினும் ஒரு சிலரே மாறுபட்டு காணப்படுகின்றனர்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு