வவுனியா நகரில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
வவுனியா நகரில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா நகரின் மத்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக இருந்து சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஈக்கள் மொய்த நிலையில் ஒருவர் காணப்படுவதாக பொது மகனொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். 

சடலம் தடவியல் பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் யாசகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு