14 வயதான தனது மகளை 3 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது...

ஆசிரியர் - Editor I
14 வயதான தனது மகளை 3 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது...

14 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையான பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் பொத்துவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுவந்த நிலையில், 

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையை சம்பவதினமான இன்று காலை கைது செய்யப்பட்டிருப்பதுடன்,

பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு