முதியோர்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவு பிரதேச செயலகங்கள் மூலம் வழங்க நடவடிக்கை...

ஆசிரியர் - Editor I
முதியோர்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவு பிரதேச செயலகங்கள் மூலம் வழங்க நடவடிக்கை...

நாடு முழுவதும் தபாலகங்களில் இடம்பெற்று வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபாலகங்கள் ஊடாக வழங்கப்படும் மூத்த பிரஜைகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மூத்த பிரஜைகளுக்கான 2000 ரூபா கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களினூடாக வழங்கவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய சமூக சேவைகள் திணைக்களத்தினால் சகல பிரதேச செயலர்களுக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவுகளை இன்று 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு முன்னராக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள் தவறாது சென்று பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலர்கள் மற்றும் சமூக சேவைகள் பிரிவினரும் அறிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் மூத்த பிரஜைகளுக்கான கொடுப்பனவில் 15 பிரதேச செயலகப் பிரிவையும் சேர்ந்த 19944 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு