யாழ்.கல்வியங்காட்டில் புலனாய்வாளர் என கூறி வீட்டுக்குள் நுழைந்து துணிகர கொள்ளை!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் புலனாய்வாளர் என கூறி வீட்டுக்குள் நுழைந்து துணிகர கொள்ளை!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையன் சுமார் 38 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். 

கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் தன்னை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக்கொண்டு வயோதிப தம்பதியினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்துள்ளார்.

பின்னர் வீட்டினை சோதனையிட வேண்டும் எனக் கூறி வீட்டினுள் சென்று அலுமாரிகளை சோதனையிட்டு அங்கிருந்த 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு