யாழ்.கட்டப்பிராயில் வீடு உடைத்து கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கட்டப்பிராயில் வீடு உடைத்து கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் கடந்த 17ம் திகதி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து 16 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வீட்டின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாத சமயம் வீட்டு கதவை உடைத்து வீட்டில் இருத்த 16 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது இது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினர் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

கைதான சந்தேகநபர்களிடமிருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நீண்டநாள்களாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் போதைப்பொருள் பாவனைக்காகவே களவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர். 

மேலும் சந்தேகநபர்கள் நாயன்மார்கட்டை சேர்ந்த 24 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு