யாழ்.சாவகச்சோியில் நடந்த இசை நிகழ்வில் கலந்துகொண்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் கண் பாதிப்புக்குள்ளாகினர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் நடந்த இசை நிகழ்வில் கலந்துகொண்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் கண் பாதிப்புக்குள்ளாகினர்..!

யாழ்.சாவகச்சோியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டிருந்த 50 க்கும் மேற்பட்டவர்களின் கண்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். 

சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் மிகையொளிகள் , 

புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாக பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கண் எரிவு , கண் வீக்கம் ,தொடர்ச்சியாக கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புக்களுக்கு 

உள்ளவர்கள் , தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கைந்து பேர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு