யாழ்.கோண்டாவிலில் மாணவர்களை இலக்குவைத்து போதை கலந்த பாக்கு விற்பனை, ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் மாணவர்களை இலக்குவைத்து போதை கலந்த பாக்கு விற்பனை, ஒருவர் கைது!

யாழ்.கோண்டாவில் பகுதியில் போதை கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக 

கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இந்நிலையில் குறித்த பகுதியை நோட்டமிட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவினர் போதை கலந்த பாக்குடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் 750 கிராம் போதை கலந்த பாக்கு காணப்பட்டதுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு