புலிகளின் புதையல் தேடிய ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
புலிகளின் புதையல் தேடிய ஒருவர் கைது..

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நவீன ஸ்கா னர்களுடன் தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தேடிய இருவரில் ஒருவரை பொலிஸர் கைது செய் துள்ளனர்.

நேற்று இரவு இருவர், நவீன ஸ்கேனர் மூலம் தேடுதல் மேற்கொள்வது தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப் படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, தேடுதலில் ஈடுபட்ட ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், மற்றையவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, தேடுதலுக்குப் பயன்படுத்திய 58 இலட்சம் பெறுமதியான ஸ்கேனரும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரையும் ஸ்கேனரையும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பூநகரியின் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஓரிரு மாதங்களிற்கு முன்னர் குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட கொள்கலன் தொடர்பில் பொலிஸாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு