இரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..

ஆசிரியர் - Editor I
இரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..

இரணைமடு குளத்திற்கு தெற்கு பக்கமாக சுமார் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியம ர்த்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மேற்கொண் டிருந்த முயற்சி ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிது காலம் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீ ளவும் அந்த  முயற்சிக்கு உயிர் கொடுக்கப்படுவதானது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும்;.

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார். வடமாகாணம் தழுவிய காணி பிரச்சினைகள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப் பின் உயர்மட்டக்குழ நேற்று கொழும்பில் கூடி ஆராய்ந்திருந்தது. இச் சந்திப்பின் பின்னர் ஊ டகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவா

று கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இரணைமடு குளத்திற்கு தெற் குப் பக்கமாக சீன அரசாங்கத்தினால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பொருத்து வீடுகள் பெரு மளவில் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சுமார் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்றுவதற்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ முயற்சித்திருந்

தார். எனினும் ஆட்சி மாற்றத்தினால் மேற்படி விடயம் சில காலம் கைவிடப்பட்டிருந்த நிலை யில் மீண்டும் அந்த குடியேற்றத்தை செய்வதற்கான முயற்சிகள் துரித கதியில் நடைபெற்றுவ ருவதாக நேற்று நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டத் தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த குடியேற்றம் தொடர்பாகவும், வரைபடங்கள், ஆதாரங்

களுடன் ஆவணம் ஒன்றை தயாரிக்கும் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி விடயம் மிக ஆபத்தானது என்பதுடன், போருக்கு பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை கட்டுமானங்க ளை அழிக்கும் இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதை தாம் அக் கூட்டத்தில் சுட்டிக் காட்டியதுடன், இந்த விடயம் தொடர்பாகவும் மேலதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என

கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு