இராணுவம் எமது மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது..

ஆசிரியர் - Editor I
இராணுவம் எமது மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது..

போர் நடைபெற்ற காலப்பகுதியில் எமது மக்களை தயவுதாட்சண்யம் இல்லாமல் கொத்து க் கொத்தாக படுகொலை செய்த குற்ற உணர்ச்சியினால்தான் சிவில் பாதுகாப்பு திணைக்க ளத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி மக்களுக்கு நன்மை செய்கிறார். அந்த குற்ற உ ணர்சி அவரை வாழ்நாள் பூராகவும் வாட்டி வதைக்கும் அதனாலேயே நன்மை செய்கிறார்.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். வடமாகா ண நீர்பாசன திணைக்களத்தின் தலமை அலுவலகம் நேற்று முல்லைத்தீவு மாங்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது. இத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியதாவது,

அண்மையில் பத்திரிகையிலும் ஊடகங்களிலும் வெளிவந்த ஒரு செய்தியில் இராணுவத் தளபதி  ஒருவரின் செயலை  பாராட்டிக் கௌரவித்து அவருக்கு  மலர் மாலைகள் அணி வித்து  பல்லக்கில் ஏற்றிவந்து விடை கொடுத்து அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதற்கு இயல்பாகவே அந்த அலுவலர் அவ்வாறான நல்

ல குணநலன்களைக் கொண்டிருந்தாரா அல்லது அவ்வாறு இயங்குமாறு பணிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அவர்கள் செயற்பட்டார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடப்பட் ட நிதிகள் எங்கிருந்து வந்தன என்பன பற்றி எதுவுமே கூறப்படவில்லை. முன்பள்ளி ஆசி

ரியர்கள் எம்மால் ரூபா 6000 வழங்கப்பட்டு வருகின்றனர். ஊளுனு ரூபா 30000 க்கு மேலாக வழங்கி வந்துள்ளது. இந் நிதி இதற்கென இராணுவத்திற்கு ஒதுக்கி வைத்த பணமாக இருக்க முடியாது. இவ்வாறான செலவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாத தால் இராணுவம் திட்டமிட்டே ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்து எமது மக்களை விலை

க்கு வாங்குகின்றதோ என்று எண்ணவேண்டியுள்ளது. அவர்களுக்கான மேலதிக பணம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை இராணுவம் விபரிக்க வேண்டும். இந்த நிதிகள் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்டிருப்பின் அல்லது வடமாகாண சபையின் ஒத்திசைவோடு மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டிருப்பின் எம் மக்களை விலைக்கு வா

ங்கும் ஒரு கைங்கரியமாக அது அமைந்திருக்காது. யுத்த காலப் பகுதியில்  எமது உறவு களை  முதியவர், குழந்தைகள், பெண்கள், இளைஞர், யுவதிகள், நோய்வாய்ப்பட் டவர்க ள் என்ற எதுவித  வேறுபாடுகளோ  தயவுதாட்சண்யமோ  இன்றி கொத்துக் கொத்தாக கொன்று குவித்த  நிகழ்வுகளை நேரில் பார்த்த  எவருக்கும்  அவை மறந்து போய்விட நி

யமில்லை. அவ்வளவு உயிர்களையும்  காவு கொள்வதற்கு  தாம் சார்ந்த ஒரு அமைப்பு காரணமாக இருந்ததே என்ற கவலை குறித்த இராணுவ அலுவலருக்கு இருந்ததோ நான் அறியேன்.  இருந்திருந்தால் அந் நினைவு வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கு ம்  என்று எதிர்பார்க்கலாம். அதனடிப்படையில் தமது தவறுகளை சீர் செய்வதற்கும் அல்

லது  இறைமன்றாட்டம்  மேற்கொள்வதற்குமாக  இவ்வறான தார்மீக சிந்தனைகள்  அந்த அலுவலரிடம் தோற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதை நாம் உணர வேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு