30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லை!! -மணப்பெண் தேடி 200 இளைஞர்கள் பாத யாத்திரை-

ஆசிரியர் - Editor II
30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லை!! -மணப்பெண் தேடி 200 இளைஞர்கள் பாத யாத்திரை-

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

அண்மையில் குறித்த இளைஞர்கள் அனைவரும் ராஜா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்று மக்கள் கவனத்தை ஈர்த்திருந்தனர். திருமணமாகாத அந்த இளைஞர்கள் அனைவருக்கும் 30 வயதுக்கும் மேலாகிறது.

அதன்படி அவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பாத யாத்திரை செல்ல தீர்மாணித்து உள்ளனர். மாண்டியா தாலுக்காவில் இருந்து அந்த கோவில் சுமார் 105 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இந்த கோவிலுக்கு அவர்கள் மணமகள் வேண்டி 3 நாட்கள் பாத யாத்திரையாக நடக்க உள்ளனர். இந்த பாத யாத்திரைக்கு "பிரம்மாச்சாரிகள் பாதயாத்திரை" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

எதிர்வரும் 23  ஆம் திகதி இந்த பாத யாத்திரை ஆரம்பமாக உள்ளது. இதில் சுமார் 200 திருமணமாகாத இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாதவர்கள் இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்ளலாம் என்று அமைப்பாளர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த பாத யாத்திரைக்கு இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மணமகள் தேடி நடக்கும் 3 நாட்களும் 3 வேளை உணவும், தங்கும் இடங்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு