சர்வதேச போட்டியில் இருந்து ஆய்வு!! -அறிவித்தார் அவுஸ்ரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்-

ஆசிரியர் - Editor II
சர்வதேச போட்டியில் இருந்து ஆய்வு!! -அறிவித்தார் அவுஸ்ரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்-

அவுஸ்ரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரராகவும் அந்நாட்டு ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ள ஆரோன்பிஞ்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 

சொந்த மண்ணில் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த ரி-20 உலக கோப்பையில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான அவுஸ்ரேலிய அணி தோற்று ஏமாற்றம் அளித்தது. 

ஓய்வு தொடர்பாக ஆரோன்பிஞ்ச் கூறியதாவது:- 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட மாட்டேன். இதை உணர்ந்துதான் ஓய்வு முடிவை எடுத்தேன். கேப்டன் பதவியில் இருந்து செல்வதற்கு இதுவே சரியான தருணம். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன். 

36 வயதான ஆரோன்பிஞ்ச் 76 இருபது ஓவர் போட்டிக்கு கேப்டனாக இருந்து உலக சாதனை படைத்துள்ளார். 103 ரி-20 போட்டிகளில் விளையாடி 3,120 ஓட்டங்களை எடுத்துள்ளார். 2 சதமும், 19 அரை சதமும் அத்துள்ளார். அதிகபட்சம் 172 ஓட்டங்களை குவித்துள்ளார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 146 ஒருநாள் ஆட்டத்தில் 5,406 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 17 சதமும், 30 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 153 ஓட்டங்கள் குவித்துள்ளார். 5 டெஸ்டில் மட்டும் விளையாடி இருக்கிறார். 

ரி20 போட்டியில் 40 வெற்றியை அணித்தலைவர் பதவியில் பெற்றுக் கொடுத்துள்ளார். 32 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 3 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. 

55 ஒருநாள் போட்டிக்கு அணித்தலைவராக இருந்து 31-ல் வெற்றி பெற்றார். 24 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. ரி-20 உலக கோப்பையை அவுஸ்ரேலியா 2021 ஆம் ஆண்டு கைப்பற்றியது. ஆரோஞ்ச் பிஞ்ச் தலைமையில் தான் உலக கோப்பை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு