சுன்னாகம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் தொடா்ச்சியாக 5 போ் கைது..

ஆசிரியர் - Editor I
சுன்னாகம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் தொடா்ச்சியாக 5 போ் கைது..

யாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு இளைஞா்கள் மீது பொலிஸாா் நடாத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூல பிரச்சி னைகளுடன் தொடா்புடையவா்கள் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னா் உருவான அசாதார சூழலுக்கு காரண மானவா்கள் என சந்தேகிக்கப்படும் 5போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

மல்லாகம் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடந்த திருவிழாவின் போது, இளைஞனர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்த போதும், திட்டமிட்டு சுட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பினர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பிலேயே குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு