பரியேறும் பெருமாள் பட புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்

ஆசிரியர் - Editor II
பரியேறும் பெருமாள் பட புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நெல்லை தங்கராஜ் உயிரிழந்துள்ளார்.

தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு