யாழ்.வலிகாமம் வடக்கில் நாளை 108 ஏக்கர் காணி விடுவிப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலிகாமம் வடக்கில் நாளை 108 ஏக்கர் காணி விடுவிப்பு!

யாழ்.வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 108 ஏக்கர் காணி நாளை மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் மேற்படி காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் 

108 ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 

பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு