வீடு புகுந்து தாக்கி, கத்திமுனையில் அச்சுறுத்தி 20 பவுண் நகைகள் கொள்ளை! பருத்தித்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து தாக்கி, கத்திமுனையில் அச்சுறுத்தி 20 பவுண் நகைகள் கொள்ளை! பருத்தித்துறையில் சம்பவம்..

யாழ்.பருத்தித்துறை - திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி அச்சுறுத்தி சுமார் 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

அதிகாலையில் முடிமூடிகளுடன் கதை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி, தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசேட குழு அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு