2009ம் ஆண்டு இறுதிப்போா் காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்ட 500 போின் பெயா் பட்டியலை வெளியிட்டது ஐ.நா..

ஆசிரியர் - Editor I
2009ம் ஆண்டு இறுதிப்போா் காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்ட 500 போின் பெயா் பட்டியலை வெளியிட்டது ஐ.நா..

2009ம் ஆண்டு இறுதிப்போா் காலப்பகுதியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 500 பேருடைய பட்டிய லை ஜ.நா சபையின் குழு வெளியிட்டிருக்கின்றது. 

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவே இந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிக விரைவில் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் குழு பரிந்துரைத்துள்ளது.

ஒரு அவசர செயல் காரணமாக காணாமல் போன நபரின் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தமது வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா தெரிவித்துள்ளார்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்பம் , உறவுகள், நண்பர்கள் தற்போதைய நிலைமை தொடர்பில் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் உள்ளனர். அவர்களைக் கருத்திற்கொண்டே இந்த 500 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால், இவ்வாறு அநீதிக்கு உள்ளான நபர்களுக்கு நியாயத்தை நிறைவேற்று அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அவர்களின் குடும்பங்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநா சபையின் குழுவின் உபதலைவர் ரெய்னர் ஹஹில் குறிப்பிடுகையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டோர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகையில் விரைந்து தலையீடு செய்வதே ஒரேயொரு வழியாகும். 

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித விசாரணை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தீர்வுக்காக உறவினர்களைக் காத்திருக்கச் சொல்வது நியாயமற்ற செயலாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு