அரச வங்கியிலிருந்து காணாமல்போன சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள்!

ஆசிரியர் - Editor I
அரச வங்கியிலிருந்து காணாமல்போன சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள்!

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் உள்ள அரச வங்கியிலிருந்து சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காணாமல்போயுள்ளதாக தொியவருகின்றது. 

நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற நபர் ஒருவர், நகைகளை மீட்பதற்கு முயற்சித்தபோது நகைகள் காணாமல் போயுள்ளது என கூறப்பட்டதாக, 

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மவ்பிம சிங்கள ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கி மேலாளர் தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 12 பேர் அடகுவைத்த நகைகளும் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.

2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கக் கடனுக்காக அடகு வைக்கப்பட்ட நகைகள் இவ்வாறு காணாமல் போனதாக சிஐடி புகார் கூறுகிறது.

குறித்த அரச வங்கியின் முகாமையாளர் காணாமல் போன நகைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த புகாரில், நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் 2 சாவிகள், வங்கி ஊழியர்கள் இருவரின் பிடியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நகைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனி குழுவொன்றை மட்டக்களப்புக்கு அனுப்ப உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு