காணாமல் போன சிறுவனை சடலமாக சுமந்து வந்து கரை சேர்த்த முதலை!! -அதிர்ந்து போன மக்கள்-

ஆசிரியர் - Editor II
காணாமல் போன சிறுவனை சடலமாக சுமந்து வந்து கரை சேர்த்த முதலை!! -அதிர்ந்து போன மக்கள்-

காணாமல் போன சிறுவனை, முதலை ஒன்று கொண்டு வந்து சேர்த்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிழக்கு காலிமண்டான் மாகாணத்தில் உள்ள ஜாவா முகத்துவாரம் அருகே முகமது ஜியாத் விஜயா என்ற 4 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் காணாமல் போய் 2 நாட்கள் ஆனதால் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் இருந்தனர். அப்போது முதலை ஒன்று முகமது ஜியாத்தின் உடலை சுமந்துகொண்டு வந்து கரையில் சேர்த்தது.

குறித்த முதலை சுமார் ஒரு மைல் தூரம் சிறுவனின் உடலை தனது தலைக்கு மேல் சுமந்து வந்ததாக தெரிய வந்தது. அவனது உடலை அது இறக்கிவிட்டு மீண்டும் தண்ணீரில் பின் வாங்கியது. இது காண்போருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது.

அதன் பின்னர் சிறுவனின் உடலை பரிசோதித்தபோது, உடலில் கடிபட்ட தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கிழக்கு காலிமண்டான் பசர்னாஸ் தேடல் மற்றும் நிவாரண அலுவலகத்தின் தலைவர் மெல்கியான்ஸ் கோட்டா தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு