15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயதான இளைஞன் 2 மாதங்களுக்கு மேல் தலைமறைவாகிருந்த நிலையில் கைது!

ஆசிரியர் - Editor I
15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயதான இளைஞன் 2 மாதங்களுக்கு மேல் தலைமறைவாகிருந்த நிலையில் கைது!

15 வயதான சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதான இளைஞன் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் மட்டக்களப்ப - வெல்லாவௌ பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

கடந்த வரும் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக 

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்த நிலையில் குறித்த இளைஞன் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதனையடுத்து தலைமறைவாகிய இளைஞனை பொலிசார் தேடிவந்த நிலையில் நேற்று இரவு குறித்த இளைஞனை கைது செய்ததுடன் 

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு