யாழ்.மாநகர முதல்வராக இ.ஆனோல்ட் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் வழக்கு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வராக இ.ஆனோல்ட் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் வழக்கு தாக்கல்..

யாழ்.மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ்.மாநகர முன்னாள் முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் யாழ்.மேல் நதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கு செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினம் வழக்கு விசாரணை எடுக்கப்படவுள்ளதுதேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது,

பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசுரித்தமை 

போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் இன்றைய தினம் சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு