இறந்த பெண்ணின் சடலத்தை தின்ற நாய்கள்!! -உடலை மீட்க்கச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சிச் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
இறந்த பெண்ணின் சடலத்தை தின்ற நாய்கள்!! -உடலை மீட்க்கச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சிச் சம்பவம்-

வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் கொடித்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், 5 நாய்களால் பகுதியளவு சாப்பிட்ட நிலையில் இறந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அர்ஜென்டினா நாட்டின் சான்டா ரோசா நகரில் உள்ள ஏர்போர்ட் சுற்றுப்புறத்தில் இருக்கும் வீடு ஒன்றில் இருந்து ஒரு வாரமாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

துர்நாற்றம் வீசும் வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார், 67 வயதான அனா இனெஸ் டி மரோட்டின்(Ana Inés de Marotte) என்ற பெண் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர்.மேலும் அனா இனெஸ் டி மரோட்டின் உடல் அவரது 5 நாய்களால் பகுதியளவு உண்ணப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சடலமாக மீட்க்கப்பட்ட பெண் மரோட் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார், ஆனால் சாண்டா ரோசா சானடோரியத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அன்றே விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய மரோட், ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு