ஆடைகள் களைய சொல்லி விலங்குகளை போல் நடத்தினார்கள்!! -விமான பணிப்பெண் நேர்முக தேர்வுக்கு சென்ற இளம் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
ஆடைகள் களைய சொல்லி விலங்குகளை போல் நடத்தினார்கள்!! -விமான பணிப்பெண் நேர்முக தேர்வுக்கு சென்ற இளம் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-

ஸ்பெயினில் விமான பணிப்பெண் வேலைக்காக விண்ணப்பித்திருந்த பெண் ஒருவரை ஆடைகள் களைந்து நாய் போன்று நடத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குவைத் ஏர்வேஸ் நிறுவனத்திற்காகவிமான பணிப்பெண்கான நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. மாட்ரிட் விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள Melia Barajas ஹொட்டலில் இது நடந்துள்ளது.

23 வயதான Mariana என்பவர் தெரிவிக்கையில், சம்பவத்தின் போது பெண் ஒருவர் தம்மை ஆடைகளை களைய சொன்னதாகவும், பின்னர் அவர் குறிப்பெடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த நிமிடங்களில் உயிரியல் பூங்காவில் விலங்குகள் போல தம்மை நடத்தப்பட்டது போன்று உணர்ந்ததாக Mariana கண்கலங்கியுள்ளார். தம்முடன் தேர்வுக்கு கலந்துகொண்டவர்களில், அதிக உடல் எடை கொண்டவர்கள், மச்சங்கள் அல்லது காணக்கூடிய வடுக்கள் இருந்தவர்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 7 மொழிகள் பேசும் ஒரு இளம்பெண்ணின் புருவத்தில் சிறிய தழும்பு இருந்ததால் அவள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாள் எனவும், மொழிப்புலமை குறித்து தாங்கள் கவலைப்படுவதில்லை எனவும் அந்த விமான நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளதாக Mariana பரபரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு