காதர் மஸ்த்தான் இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஒரு நிர்வாக தவறு..

ஆசிரியர் - Editor I
காதர் மஸ்த்தான் இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஒரு நிர்வாக தவறு..

காதர் மஸ்த்தான் இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஒ ரு நிர்வாக தவறு என கூறியிருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அதனை அவர்கள் சரி செய்வார்கள் ஆகவே அதையொரு பெரிய விடயமாக எடுக்காதீர்கள் எனவும் கூறினார். 

இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்த்தான் நியமி க்கப்பட்டமை தொடர்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கு ம்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் கூறுகையில், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக ஒரு இஸ்லாமியர் நியமிக்கப்பட்டமை ஒரு நிர்வாக தவறு. இந்து சமய விவக hரங்களுடன் சேர்த்து மீள்குடியேற்றம், 

புனர்வாழ்வு என பல அமைச்சு துறைகள் இருக்கின்றன. அவற்றை பார்த்தவர்கள் இதனை கவனிக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே அது ஒரு நிர்வாக தவறு அதனை ஒரு பெரிய விட யமாக எடுத்துக் கொண்டு 

எல்லாவற்றையும் பிசைந்து கொண்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அந்த அமைச்சு துறையை மாற்றி வேறு ஒருவருக்கு கொடுப்பதன் ஊடாக நடந்திருக்கும் நிர்வாக தவறை அவர்கள் சீர்செய்து கொள்வார்கள் என முதலமைச்சர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு