ஒரு பிள்ளையின் தாயான 47 வயதான பெண்ணை காணவில்லை!

ஆசிரியர் - Editor I
ஒரு பிள்ளையின் தாயான 47 வயதான பெண்ணை காணவில்லை!

47 வயதான ஒரு பிள்ளையின் தாய் கடந்த 22ம் திகத தொடக்கம் காணாமல்போயுள்ளதாக குறித்த பெண்ணின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

கொக்கட்டிச்சோலை - படையாண்டவெளி பகதியை சேர்ந்த சட்டாச்சரம் தேவலஷ்மி (வயது47) என்ப பெண்ணே காயாமல்போயுள்ளார். 

இவரது கணவர் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் தனது மகனுடன் குறித்த பெண் வாழ்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்து 22 ம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவரது மகன் நேற்றுமுன்தினம் (27) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் காணாமல் போயுள்ளவர் பற்றிய தகவல் தெரிந்தால் 

உடனடியாக 065-2056936 கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிகை விடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு