மயானத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக தகவல்...

ஆசிரியர் - Editor I
மயானத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக தகவல்...

மயானம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டிருக்கும் நிலையில் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், அருகில் நஞ்சுப் பதார்த்தங்கள் காணப்படுவதாகவும் தொியவருகின்றது. 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - திருப்பழுகாமம் மயானத்தில் மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட சடலம் எருவில் பகுதியை சேர்ந்த க.இராதாகிருஷ்ணன் (வயது5) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுவதுடன் அருகில் நச்சு பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் எவ்வாறு இங்கு வந்தார் எதனால் மரணம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக 

களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு