வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த இருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நாடாளுமன்ற உறுப்பினர்..!

ஆசிரியர் - Editor I
வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த இருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நாடாளுமன்ற உறுப்பினர்..!

வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய இருவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் முயற்சியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் வவுனியா - சிதம்பரபுரம் கோமரசங்குளம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த பகுதியூடாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சென்றுகொண்டிருந்த சமயத்தில் 

வீதியில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட ஒருவரை நோயாளர் காவு வண்டியின் உதவியுடன்வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். 

அத்துடன் மேலும் ஒருவரும் குறித்த பகுதியில் வெட்டுக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போத்தல்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினாலே இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாவும் 

அவர்களின் வயது 50, 53 எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு