காதா் மஸ்த்தானுக்கு இந்து சமய விவகார அமைச்சு வழங்கியதை கண்டித்து நல்லுாாில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
காதா் மஸ்த்தானுக்கு இந்து சமய விவகார அமைச்சு வழங்கியதை கண்டித்து நல்லுாாில் போராட்டம்..

இந்துமத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நேற்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று   பிற்பகல் 4.00 மணிக்கு சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் ஜனாதிபதியே இதுதான் மதங்களை மதிக்கும் உங்கள் நல்லாட்சியா, தமிழ் அரசியல்வாதிகளே ஏன் இந்த மௌனம் இந்து வாக்குகள் மட்டும் தேவையா, இலங்கையில் இந்து விவகார பிரதி அமைச்சராக சைவ அரசியல்வாதி இல்லையா என்ற வாசகங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதேவேளை பலதரப்பிடமிருந்து கண்டனங்கள் எதிர்ப்பையடுத்து காதர் மஸ்தானிடம் இருந்து இந்து மத விவகார பிரதி அமைச்சுப்பதவியை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவலகள் தெரிவிக்கின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு