யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கோர விபத்தில் சிக்கியது! ஒருவர் பலி, 15 பேர் காயம்…

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கோர விபத்தில் சிக்கியது! ஒருவர் பலி, 15 பேர் காயம்…

கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு