ஆசனவாயில் வெடிகுண்டுடன் வைத்தியசாலைக்கு வந்த நபர்!! -அலறியடித்து ஓட்டிய நோயாளிகள்-

ஆசிரியர் - Editor II
ஆசனவாயில் வெடிகுண்டுடன் வைத்தியசாலைக்கு வந்த நபர்!! -அலறியடித்து ஓட்டிய நோயாளிகள்-

பிரான்ஸ் நாட்டில் ஆசனவாயில் வெடிகுண்டு ஒன்றுடன் வைத்தியசாலைக்கு நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை இரவு, அந்நாட்டின் Toulon நகரில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு வந்த நபர் கூறிய விடயத்தால், சில நொடிகளில் வைத்தியசாலையே பரபரப்பானது.

தனது ஆசனவாயில் ஒரு பொருளை நுழைத்ததாகவும், அதை திரும்ப எடுக்க முடியவில்லை எனவும் அவர் கூற, அது என்ன பொருள் என பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே பதறிப்போன வைத்தியர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, வெடிகுண்டு நிபுணர்கள் வைத்தியசாலைக்குள் நுழைந்தனர். சிறுவர் விடுது, உட்பட பல விடுதிகளில் இருந்த நோயாளிகளும் ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள்.

பிரச்சினை என்னவென்றால், அந்த நபர் அந்த வெடிகுண்டை எளிதாக ஆசனவாயில் நுழைத்துவிட்டார். ஆனால், அதை எளிதாக வெளியே எடுக்க முடியவில்லை.

ஆகவே, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த நபரின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துதான் அந்த வெடிகுண்டை எடுக்கமுடிந்தது. ஆனால், அவர் எதற்காக அந்த வெடிகுண்டை தனது ஆசனவாய்க்குள் நுழைத்தார் என்பதை கடைசிவரை அவர் கூறவேயில்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு