வவுனியா - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் தை மாதம் 5ம் திகதி மூடப்படுகிறது! யாழ் ராணி ரயில் சேவை வவுனியாவரை...

ஆசிரியர் - Editor I
வவுனியா - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் தை மாதம் 5ம் திகதி மூடப்படுகிறது! யாழ் ராணி ரயில் சேவை வவுனியாவரை...

வவுனியா - அனுராதபுரம் இடடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் தை மாதம் 5ம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அனுராதபுரம் - வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர காங்கேசன்துறையில் இருந்து முறுக்கண்டி வரை இயக்கப்படும் யாழ் ராணி ரயில் வவுனியா வரை மாத்திரம் இயக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு