இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் நடமாடிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவருக்கு மக்கள் சிறப்பான கவனிப்பு...

ஆசிரியர் - Editor I
இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் நடமாடிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவருக்கு மக்கள் சிறப்பான கவனிப்பு...

கிளிநொச்சி - முழங்காவில் இரணைமாதாநகர் கிராமத்தில் இராணுவ சீருடையை ஒத்த உடையுடன் களவில் ஈடுபட்ட நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இரணமாதாநகர் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் களவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.


வழிப்பறி நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள் குழு ஒன்று ஈடுபட்டு வருவது தொடர்பில் அப்பகுதி  இளைஞர்கள் அவதானித்தனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர்  வழிப்பறிக்காக இராணுவ சீருடையை ஒத்த உடைய அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் அவரை அப்பகுதி  இளைஞர்களால் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில்  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு