மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு!! -இத்தாலி பிரதமரின் தோழி உள்பட 3 பெண்கள் பலி-

ஆசிரியர் - Editor II
மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு!! -இத்தாலி பிரதமரின் தோழி உள்பட 3 பெண்கள் பலி-

இத்தாலி மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுட்டுச் சம்பவத்தில் அந்நாட்டின் பிரதமரின் தோழி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

இத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் தலைநகர் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் சங்கக் கூட்டம், அங்குள்ள விடுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர். 

இந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியை வெளியே எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. குடியிருப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அவருக்கும் பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூட்டில் இறந்துபோன பெண்களில் நிகோலெட்டா என்பவர் தனது தோழி என்றும், அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறி உள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு