நித்யானந்தாவுக்கு விருந்து!! -இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த எம்.பிக்கள்-

ஆசிரியர் - Editor II
நித்யானந்தாவுக்கு விருந்து!! -இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த எம்.பிக்கள்-

சாமியார் நித்யானந்தாவை இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு - மைசூர் சாலையில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு முறைப்பாடுகள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி; தலைமறைவாகவே உள்ளார்.

அவர் 'கைலாசா' என்ற தீவைவிலைக்கு வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வருவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த அப்சர்வர் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:-

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பாப் பிளாக் மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்து பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கும் ரமிந்தர் சிங் ரேஞ்சர் ஆகியோர் இணைந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மேல் சபையில் இந்தாண்டு நடைபெற்ற தீபாவளி விருந்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நித்யானந்தாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த விருந்துக்கு முன்பாகநித்யானந்தா அமைப்பு சார்பில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. அவை விருந்தில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு