மோட்டார் சைக்கிளை திருடி வீட்டுக்குள் மறைத்துவைத்திருந்த நபர் கைது!

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளை திருடி வீட்டுக்குள் மறைத்துவைத்திருந்த நபர் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடி வீட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மைய நாட்களாக கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 

இந்நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி அலுவலக விடுதியொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே, 

நேற்றைய தினம் வீடொன்றினுள் மறைத்து வைத்திருந்த குறித்த மோட்டார் சைக்கிளோடு சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.இதேவேளை குறித்த சந்தேக நபரையும் சான்றுப் பொருளையும் 

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு